நாட்டு கோழி குழம்பு::
நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது. அதன் சுவையும், மணமும் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரியாணி கடைகளில் தயாராகும் ஸ்பெசல் குழம்பில் தெரிந்துவிடும். கிராமப்பகுதிகளில் கை, கால் உடைந்து கட்டுப்போட்டு படுத்திருப்பவர்களுக்கு நாட்டுக்கோழி அடித்து நல்லெண்ணெய் ஊற்றி சூப் குடிக்க கொடுப்பார்கள் அந்த அளவிற்கு சத்தானது நாட்டுக்கோழி. நாவில் நீர் ஊறச் செய்யும் நாட்டுக்கோழியை சமைத்துப் பாருங்களேன்.தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழி – 1 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 3
தேங்காய் பால் – 1 கப்
மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன்
குழம்பு மசாலா தூள் – 3 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி
சோம்பு – 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1கொத்து
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலா செய்முறை
சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இத்துடன் பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து நன்றாக வதக்கவும். ஆறவைத்து மிக்ஸிசியில் மசாலாவாக நைசாக அரைக்கவும்.
குழம்பு செய்முறை
நாட்டுக்கோழியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். மஞ்சள் தூள், குழம்பு மசாலா சேர்த்து வதக்கவும். இதில் கோழியை சேர்த்து நன்றாக கிளறவும். அப்போது தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். சிறிது நேரம் விசில் போடாமல் மூடி வைக்கவும்.
5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கிளறவும். இதனுடன் தேங்காய்பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு விசில் விடவும். நாட்டு கோழி என்பதால் 5 விசில் வரை விடலாம், அப்பொழுதுதான் நன்றாக வெந்து சாப்பிட சுவையாக இருக்கும். விசில் இறங்கின உடன் மல்லித்தழை தூவவும். காரசாரமான நாட்டுக்கோழி தயார். சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். பிரியாணிக்கு ஏற்ற சைடு டிஸ் இது.
Source From http://www.thaikkal.com/?p=8980
Posted on July 12, 2013 by அபூ யஹ்யா
Posted on July 12, 2013 by அபூ யஹ்யா
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
செட்டிநாடு கோழி குழம்பு
பொதுவாக நம் எல்லோருக்கும் பிடித்த உணவு பட்டியலில் கோழி குழம்பும் உண்டு .திருவிழா நேரங்களில் சுவையாக சமைத்த கோழி குழம்பை ருசி பார்த்தால்தான் சிலருக்கு திருவிழாவே திருவிழா போன்று இருக்கும் .அதிலும் செட்டி நாடு கோழி குழம்பு என்றால் பல பேருக்கு கொள்ளை பிரியம் .சரி செட்டி நாடு கோழி குழம்பு எப்படி செய்வது என்று பார்போமா
தேவையான பொருட்கள் :
நாட்டு கோழி – 1 கிலோ
பட்டை,கிராம்பு – 2
சோம்புத்தூள்- 2 கரண்டி
சீரகத்தூள் – 1 கரண்டி
ஏலக்காய் – 2
மஞ்சள்தூள்- 1/2 கரண்டி
மிளகாய்த் தூள்- 1 1/2 கரண்டி
மல்லித்தூள் – 2 கரண்டி
தேங்காய் – 1 மூடி
உப்பு – தேவையான அளவு
இஞ்சி/பூண்டு விழுது – 3 கரண்டி
காய்ந்த மிளகாய் – 4
தக்காளி – 250 கிராம்
சிறிய வெங்காயம் – 250 கிராம்
எண்ணெய் – 250 கிராம்
செய்முறை :
முதலில் மஞ்சள் தூள் அரை கரண்டி , சீரகத்தூள் ஒரு கரண்டி, சோம்புத்தூள் ஒரு கரண்டி , மல்லித்தூள் இரண்டு கரண்டி , மிளகாய்த் தூள் ஒன்றரை கரண்டி , தேங்காய், கசகசா,சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை,
ஏலக்காய் , மிளகாய் முதலியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அத்துடன் சிறிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
இப்போது இஞ்சி , பூண்டு விழுது , தக்காளி ஆகியவற்றைப் போட்டு அதனுடன் சுத்தம் செய்து நறுக்கிய கோழியை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிட்டு இறக்கவும்.இப்போது சுவையான செட்டிநாடு கோழி குழம்பு தயார்.
Source From http://tamilexplorer.com/women1.php?id=29
Source From http://tamilexplorer.com/women1.php?id=29
No comments:
Post a Comment